சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முடியாது !பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்!


ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலமை என்றால் சாதாரன மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்!

சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முடியாது !

மனைவியின் தயவில் வாழ்கிறேன் !!

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும் மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2019 ம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தின் மாத வருமானம் 30,000/- ரூபாவாகவும் நாள் ஒன்றுக்கான வாழ்க்கைச் செலவுக்காக 1,000/- ரூபாயும் போதுமானதாக இருந்தது.

இவை தவிர பிள்ளைகளின் படிப்பு, மருத்துவம், மின்சாரம், தொலைபேசி இதர செலவுகளுக்கு என 15,000/- வரை தேவைப்பட்டாலும் மக்கள் தங்களை சமாளித்து வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்!

ஆனால் புதிய ஆட்சி மலர்ந்த பின்னர் மக்களது மாத வருமானத்தில் எந்த வித அதிகரிப்பும் ஏற்படவில்லை மாறாக பொருட்களுக்கான விலை 2-3 மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி நாள்  ஒன்றுக்கான வாழ்க்கை செலவுக்காக 3,000/- ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் மட்டுமல்லாது அத்தியவசியப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வாழ்வா? சாவா? எனும் நிளைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையே நாம் கொரோனாவிற்காகப் பாவிக்கும் சைனோபாம் மருந்தை சீன அரசு மற்றைய நாடுகளுக்கு 10$க்கே வழங்கியுள்ளது. ஆனால் இலங்கை அரசு 15$ விலை கொடுத்து வாங்குவது மற்றும் சீனி இறக்குமதியில் 1,500 கோடி மோசடி, அளவுக்கதிகமான வெளிநாட்டுக் கடன் ஆட்சியாளர்களுக்காகா பல கோடியில் சொகுசு வாகன இறக்குமதி என்பன ஒவ்வொரு இலங்கையருக்கும் தூக்கு மேடையை தானமாக வழங்கக் காத்திருக்கிறது அரசு

நன்றி

சோமசூரியம் திருமாறன் (facebook)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post