20.12.2021 இன்று மாலை பார்வீதியை சேர்ந்த செல்வராஜா தயாவதி (47) என்ற பெண்ணை அங்கு வேலைக்காரியாக இருந்த பெண்ணும் அவரின் தந்தையும் வெட்டி கொலை செய்து விட்டு அவர் கழுத்திலிருந்த நகைகள் மற்றும் தோட்டுடன் காதையும் வெட்டி எடுத்து சொப்பின் பையில் போட்டுக்கொண்டு போகும் போது மக்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு #அரசடி #பார்வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்துவிட்டுச் செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகப்பனும் மகளும் பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி குறித்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இந்த கொலையினை செய்துள்ளனர்.
இன்று வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த வீட்டில் வேலைகளை செய்துவிட்டு உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடிரென குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டி கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை அறுத்துள்ளதுடன் காதுகளை கழட்டமுடியாத நிலையில் அதனை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் குறித்த பெண்னை கொலை செய்துவிட்டு அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச்சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது 47 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment