அடுத்தது
என்ன? 2009 மே 18 அன்று ஒற்றுமையாக நின்று கிரிபத்(பால்சோறு) உண்டுவிட்டு இன்று கன்னை பிரித்து நின்று முட்டிமோதிக்கொள்ளும் இருதரப்பினருக்கும் மட்டுமல்ல; பெளத்த சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி நானே என்று தனது
முதுகில் தானே தட்டிக்கொண்ட கோத்தபாய
அவர்களுக்கும் பதில் தெரியாத கேள்வி இது. கோத்தாவுடன் டின்னர்
சாப்பிடுபவன் நான் என்று பெருமையடித்துக்கொள்ளும்
சுமந்திரனுக்கும் பதில் தெரியாது.
தமிழ்த் தேசிய அரசியலின் பால பாடமே தெரியாத
அவர் இன்றைய நிலையில் கடற்கரைத் தாழங்காயாக அலைந்து கொண்டு இருக்கிறார் பாவம். இ.தொ.கா
வுக்கு குட்டப்போய் பல்வேறு தரப்பிலும் குட்டுவாங்கி மண்டை வீங்கிப் போய் நிற்கிறார்.
இடது
சாரி முத்திரையோடு திரியும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் பதில் தெரியாது.இந்தியாவில் இந்தி மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று தனது கண்டுபிடிப்பை வெளியிட்ட
'பொது அறிவுத்திலகம்' விமல வீரவன்சவுக்கும் பதில்
தெரியாது. விவசாயம் செய்யப்படாவிட்டால் ஆரியகுளத்தை ஏன் புனரமைக்க வேண்டும்
என்று கேட்கும் குழந்தைகள் உள்ள சைக்கிள் கட்சியினரையும்
விட்டுவிடுவோம். ராஜபக்ச குடும்பத்தினரின் சோதிடர் ஞானக்காவுக்கும் பதில் தெரியாது.
ஒவ்வொரு முறையும் தாங்கள் பிடிக்கும் கணதெய்யோ(பிள்ளையார்) குரங்காக மாறுகின்றதே என விழிக்கும் மகா
சங்கத் தினருக்கும் பதில் தெரியாது. நான் தான் ஒன்று,
எனக்குப் பின்னால் பூச்சியங்கள் எல்லாம் வாருங்கள்; உங்களுக்கும் எனக்கும் பெறுமதி அதிகரிக்கும் என்று பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற ரணிலுக்கும் பதில் தெரியாது.
யார்
ஆட்சிப் பொறுப்பையேற்றாலும் யுத்தத்தின் பெயரால் வாங்கிய கடனையும் அதற்குரிய வட்டியையும் செலுத்தியே ஆக வேண்டும். இதற்காக
புதிதாக யாரிடம் கடன் வாங்கலாம் என்று
சிந்திக்கும் பொறிமுறையுள்ள நாட்டில் முக்கியமான விடயங்கள், பிரச்சினைகள் பற்றி எவரும் வெளிப்படையாகப் பேசுவது இல்லை.
எல்லோருக்கும்
தெரிந்த முதன்மைப் பிரச்சினையான வீங்கிப் பெருத்த இராணுவம் - அதற்கான செலவு மென்மேலும் விரிவடைந்து போவதால் நாட்டுக்கு விடிவில்லை என்று தெரிந்தும் அந்த விடயம் பற்றிப்
பேச எல்லோருமே வசதியாக மறந்து விடுகிறார்கள் போலும். இளமைக்கால உழைப்பு விரயமாகப் போவது குறித்து வெளிப்படையாகப் பேசத்
தயங்குகிறார்கள். நாட்டின் தேசியப் பால் உற்பத்தியை விட
தமிழர் பிரதேசத்தில் (மட்டக்களப்பில்)சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாக வேண்டும் என நினைப்பது தவறானது
என்று சுட்டிக்காட்ட காலிமுகத்திடலில் கூடியவர்கள் மட்டுமல்ல எல்லா எம்.பிக்களுமே தவறிவிட்டார்கள்.(விதி விலக்கு சாணக்கியன்)
*
கணிசமான
நாடுகளில் கட்டாய இராணுவ சேவை- பயிற்சி அமுல்படுத்தப்படுகிறது. அமைதியாக இருக்கும் சுவிஸ் ,சிங்கப்பூர் நாடுகளிலும் இராணுவம் என்பது அதன் தேவைக்காக மட்டும்
உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பை
உறுதிப்படுத்த வேண்டிய தேவை இந்திய ராணுவத்துக்கு
உண்டு. அங்கே படைகளில் இணைவோர் குறிப்பிட்ட காலம் பணியாற்றினால் போதும்.(சுமார் 10வருட காலம்) அதன்
பின்னர் பணியிலிருந்து தம்மை விடுவித்துத் கொள்ளலாம். அரச பணி நியமனங்களில்
குறிப்பிட்டவீதம் இந்த முன்னாள் படையினருக்கென
ஒதுக்கப்படுகிறது. அவரவர் கல்வித் தகமைகளுக்கேற்ற வகையில் நியமனம் வழங்கப்படும். குடும்ப உறவைப் பலப்படுத்த இந்த நடைமுறை உதவுகிறது.
மனைவிக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு
பொறுப்புள்ள அப்பாவாகவும் முன்னாள் படையினர் விளங்க முடியும்.
எது
எப்படி இருந்தாலும், என்னதான் வீரம் பேசிக்கொண்டாலும் பொதுவாக 30 வயது வரை மட்டுமே ஒருவரால்
தன்னை முழுமையான படைவீரனாக இயங்க முடியும்.அதன் பின்னர் மனைவி,குடும்பம்,பிள்ளைகள் என்ற நினைவே மேலோங்கியிருக்கும்.
இதுதான் யதார்த்தம். இந்தியப்படைகளில் குறிப்பிட்ட காலத்தின் பின் விலகிக்கொள்ளலாம் என்ற
கொள்கை படைகளை எப்போதும் இளம் ரத்தத்துடன் விளங்க
உதவியாக உள்ளது.
வீங்கிப்
பெருத்த இராணுவத்தைக் கொண்டுள்ள இலங்கையில் என்ன நடக்கிறது? 60 - 65 வயது வரை
குடும்பத்தைப் பிரிந்து விடுமுறைக்காலங்களில் மட்டுமே உறவுகளைப் பேணக் கூடியதாக உள்ளது. தொலைபேசியிலேயே குடும்ப உறவைப் பேணவேண்டிய நிலை.
இதனால்
குடும்ப உறவுகளிலும் ஏராளமான சிக்கல். மனஉளைச்சலுடனே படையினரும் குடும்பத்தினரும் வாழவேண்டியிருக்கிறது. கோட்டா கோ கோம் போராட்டத்தின்
போது ,வீங்கிப் பெருத்த
இராணுவம்,விமானப்படை,கடற்படை ,அதிரடிப்படை ,பொலிசாரைக்கொண்டிருந்தாலும் காலிமுகத்திடலில் சட்டம், ஒழுங்கைப் பேணமுடியாத நிலையே இருந்ததென்றால் இவ்வளவு தொகைப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும்
என்ற வினாவை ஏற்படுத்துகிறது. சில நாடுகளில் சட்டம்
,ஒழுங்கைப் பேண சில படைப்பிரிவுகளை
இலங்கை அனுப்பிய - அனுப்பும் வழக்கம் இருந்தது.சொந்த நாட்டிலேயே அமைதியைப் பேணமுடியாத இந்தப்படைகள் வேறு நாடுகளுக்குப் போய்
எதனைச் சாதிக்க முடியும்? மனித உழைப்பை ஒழுங்கு
படுத்தி நாட்டின் தேவைக்குப் பயன்படுத்தாமல் விரயமாக்குவது பற்றி எவரும் கவனமெடுத்ததாகத் தெரியவில்லை. ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள்
தேவையில்லாமல் ராணுவத் தலையீடுகள் ஏற்பட்டு பொறுப்புடன் அந்தத் துறையினர் செயற்படமுடியாத நிலை தோன்றியுள்ளது.இதற்கென
மேலதிகச் செலவினம் வேறு (உதாரணம் சுகாதார அமைச்சு - கொரோனா ஊசிபோடும் பணி)
ஜனாதிபதியின்
சிந்தனையில் உதித்தது என்ற ஆரவார அறிவிப்புடன்
உரத்தை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள்
அனைத்திலும் பொதுவாக இயற்கைப் பசளையை உருவாக்க என்ன செய்யலாம் என்ற
ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.அந்தப் பொறிமுறை ஒழுங்காக இல்லை. முதலில் அரச பண்ணைகளில் இயற்கைப்
பசளையை பயன்படுத்தி விவசாயத்தை எவ்வாறு செய்யலாம் என உற்பத்திக் குழுக்களை
அழைத்து விளக்கி ஊக்குவிக்கவேண்டும். இது ஒரு படிமுறையான
செயற்பாடு. அதைவிடுத்து ஜனாதிபதியின் சிந்தனை என்று ஆரவாரப்படுத்துவதால் எதுவும் நடக்காது. கடந்த பெரும்போகச் செய்கை வீழ்ச்சி கண்டதற்கு கோத்தபாய என்ற தனிமனிதனே காரணம்.
உண்மையில் இந்நிலைமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவராகவே பதவி விலகி இருக்க
வேண்டும்.
மேய்ச்சல்
தரை விவகாரம் முழுமையாக சிங்கள மேலாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தி நின்றது. பல்லாயிரக்கணக்கான மாடுகளின் மேய்ச்சல்தரையில் பொலநறுவை முதலான இடங்களிலிருந்து சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றினார்கள். இதற்கென விசேட கொடுப்பனவுகளும் காணிகளும் வழங்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புக்கென தெரிவுசெய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் காடையர்களே.அவர்கள் பல மாடுகளைச் சுட்டுக்
கொன்றார்கள்.பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கால் நடை வளர்ப்பாளர்களைக்
கைது செய்தார்கள். மட்டக்களப்பில் ஒரு சிங்கள எம்.பி யை தெரிவு
செய்யும் வகையில்
இனப் பரம்பலை மேற் கொள்ள கிழக்கு
மாகாண ஆளுநர் அனுராதா அம்பேக் தீவிரமாக உழைத்தார்.இவரது நோக்கத்துக்கு உடன்பட மறுத்தமைக்காக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக விளங்கிய
திருமதி கலாமதி பத்மராஜாவுக்கு 24 மணிநேரத்துக்குள்
இடம்மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது. பிள்ளையானோ, ,வியாழேந்திரனோ தமிழ்த் தேசிய உணர்விலிருந்து மக்களை அந்நியப்படுத்த முயற்சிக்கும் பல்வேறு தரப்பினரோ அனைவரும் மௌனமாகவே இருந்தார்கள். தமிழர்களுக்கு எதிராக வெற்றிகரமாகச் செயற்பட்டு வந்ததாலோ என்னவோ அண்மைக் கலவரங்களின் போது கிழக்கு மாகாண
ஆளுநரின் வீடு தப்பிவிட்டது. அல்லது ஏற்பட்டாளர்களே
அதனைப் பாதுகாக்க முயற்சித்தனரோ புரியவில்லை.
இதுவரை
காலமும் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பங்கை வழங்கி வந்த மலையகத் தோட்டத்
தொழிலாளரின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இருப்பிடத்தை உறுதிப்படுத்த காலிமுகத்திடலில் கூடியிருந்த எவரும் இது வரை முயற்சித்ததாக
தெரியவில்லை. ஏன் நல்லாட்சி அரசை
உருவாக்க இரவு பகலாக உழைத்த
சுமந்திரனுக்கும் இவை அற்ப விடயங்களாகத்
தெரிந்தன. முதலில் இ.தொ.கா
வின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள
வேண்டும். தமிழர் கூட்டணி உருவாக்கத்தின் போது ஜீ.ஜீ.தந்தை செல்வா,ஆகியோருடன் தொண்டமானும் ஒரு தலைவராக விளங்கினார்.இனப்பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்த
போதே தொண்டமான் அப்பதவியிலிருந்து விலக வேண்டிவந்தது. சிங்களவர்
மத்தியிலேயே மலையகத் தமிழர்கள் வாழவேண்டியுள்ளது என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்.
ஜே.ஆர் ஆட்சிக்காலத்தில் இவர்
அமைச்சராக விளங்கினார்.எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப்
பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களித்த
அமைச்சர் தொண்டமான் மட்டுமே (மற்றொருவர் பிரதி நீதி அமைச்சராக விளங்கிய
ஷெல்டன் ரணராஜா) இந்தியப்படைகள் தமிழரைச் சுட்டுக்கொல்கின்றன என்ற செய்தி வெளிவந்தபோது
அவர்கள் ரப்பர் குண்டுகளால் தான் சுடுகின்றனர் என்றார் அமிர்தலிங்கம்.
அக்காலத்தில்
இந்தியாவில் பட்டமங்கலத்தில் நின்றார் தொண்டமான். இந்தியப் படையினர் - புலிகள் மோதல் பற்றி ஒரு ஊடகவியலாளர் வினவிய
போது இந்தியாவில் பகத்சிங்கை எப்படி மதிக்கிறீர்களோ அப்படியே இலங்கைத் தமிழர்கள் பிரபாகரனை மதிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார். ஆயுத
விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மலையக மக்கள் - இளைஞர்களின்
பங்களிப்பு கணிசமானது.
இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் மரண வீடென்றால் நானே
பிணம்; திருமண வீடென்றால் நானே மாப்பிள்ளை என்ற
மாதிரி பொறுப்பில்லாமல் பேசுவதும் செயற்படுவதும் சுமந்திரனின் வாடிக்கை. இ.தொ.கா
வின் நடவடிக்கை பற்றி அவர் கிண்டல் அடிக்கப்போய்
செந்தில் தொண்டமான் உட்பட பலரிடமும் குட்டு வாங்கியிருக்கிறார். சுமந்திரனைத் தலையில் வைத்துத் தூக்கிக்கூத்தாடும் ஊடகவியலாளர்களும், கம்பவாருதியும் அவரது வாயை மூடவைக்க எதாவது
செய்தால் நல்லது.
***
நாட்டின்
நலனை முன்னிறுத்தி செயற்படுவோர் படையினரின் தொகையைக் குறைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் ஏற்பாடுகள் பற்றி சிந்தித்தால் நல்லது. ஏனைய மாவட்டங்களில் மக்களின்
தொகைக்கு என்ன விகிதத்தில் இருக்கின்றதோ
அதே விகிதத்தில் தமிழர் பிரதேசத்தில் இருந்தால் போதுமானது . கணிசமான தமிழரின் பாரம்பரிய நிலங்களும் விடுவிக்கப்படும்.
சிங்கள
மயமாக்கல், தமிழர் பிரதேசங்களில் இந்து ஆலயங்களை விகாரைகளாக மாற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை நிறுத்தினால் நல்லது. தமிழ் பேசும் மக்கள் இலங்கையராகச் சிந்திக்கத் தடையாக உள்ள விடயங்களை பற்றி
ஆராய்வது நல்லது.
அரசியற்கைதிகளின் விடுதலை தாமதமாகத் தாமதமாக மிருசுவிலில் சிறுவர்கள் உட்பட தமிழர்களைப் படுகொலைசெய்த சுனில் ராஜபக்ச, மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு
கொலையாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்யமுடியுமாயின், சிறையிலிருந்த ஜே.வி.பி
யினர் எந்த வழியில் விடுதலையானார்களோ
அந்த வழியில் எமது பிள்ளைகளை ஏன்
விடுவிக்க முடியாது என்று தமிழர்கள் சிந்திக்க முயல்வது தவிர்க்க முடியாது. ஏனெனில் தங்களுக்கு அடிவிழும்போதோ, தங்கள் அதிகாரப்போட்டியின் போதோ தவிர்க்க முடியாமல்
தான் தமிழர் தரப்பிற்கு கைநீட்டியிருக்கிறார்கள் சிங்களவர்கள். பின்னர் கைவிட்டு விடுவார்கள்.கனடா பிரதமர் தனது
நாட்டிலுள்ள தமிழர்களுக்கு சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக் கூறியதற்கே விசனத்துடன் கருத்துத் தெரிவித்தது சிங்கள ஆட்சி பீடம். எனவே முதலில் மாற
வேண்டியது சிங்களவரின் மனநிலை தான்.
Post a Comment