அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு ஜனாதிபதியின் ஆலோசனை சபை!


அரசியல் கைதிகளின் நீண்ட சிறை வாழ்வுக்கு தீர்வு ஜனாதிபதியின் ஆலோசனை சபை வழங்கவேண்டும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வலியுறுத்து.

கொழும்பு, ஓக. 29 “ஜனாதிபதியின் ஆலோசனை சபையானது தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து, உண்மை நிலையை அறிந்து, பரிந்துரை களை முன்வைக்க வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட சிறை வாழ்வுக்கு தீர்வு வழங்க வேண்டும்." - இவவ்hறு குரலறற்வரக்ளின ;குரல ;அமைபபு; வலியுறுதத்p  அரசியல் கைதி... யுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13 ஆவது பிரிவுக்கமைய ஆலோசனை சபை உறுப்பினர்களை பெயரிட்டுள்ளமை தொடர்பாக குரல் அமைப்பு வெளியிட் டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:“இந்தச் சபையானது பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்ற வர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, இவர்களுக்கான விடுதலைப் பொறி முறையைக் கண்டறிந்து, ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையில் ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி .ஆர். ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தங்களது பிரச்னைகளை இந்தச் சபையிடம் முன்வைக்க சந்தர்ப் பம் கிடைக்கும் என்று ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த முன்னேற்ற முன்னெடுப்பைப் பாதிக்கப்பட்டவர்கள் சாரப்p ;குரலறற்வரக்ளின ;குரல ;அமைபபு; வரவேற்றுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனை சபை தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட சிறை வாழ்வுக்கு தீர்வு வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக் கையான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், குறைந்த வேகத்தி லாவது அசையத் தொடங்கியிருப்பது சிறந்த விடயமே" - என்றுள்ளது.

நன்றி

ஈழ நாடு

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post