1990 டிசெம்பர் 01 - ஈழத்தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள். தமிழரின் உரிமைப் போரில் தம்முயிரை ஈகம் செய்யப் புறப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒரு குழுவான டெலோ (TELO) அரசின் எடுபிடிகளாகி அந்தத் தைரியத்தில் சொந்த இனத்திலேயே கூட்டுப்பாலியல் வன்முறையையும் படுகொலையையும் அரங்கேற்றிய நாள். இந்த ஈனச் செயலுக்குப் பலியானவர் ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்றழைக்கப்படும் நல்லதம்பி அனுஷ்யா. அந்தக் கொடூரம் பற்றி கவிதை இது.
31 வது ஆண்டு நினைவு (01.12.2021)
மார்கழி ஒன்று - எம் ஈழப்
பார்கழி
இழந்த நாள்...
மட்டு
நகர் தந்த வித்தகியாம்
விஜி
அவளை...
வீணாக்கப்பட்டு
வீசி எறியப்பட்ட
கரி
நாள்..
ஒட்டி
நிற்கும் ஒட்டுக்
குழு ஓநாய்க் கூட்டங்களான சொரணை கெட்டவர்களானார்கள்
ரெலோ
அமைப்பாக...
லன்புனர்ந்தனர் தம்
இச்சை
வெறிக்காக...
இல்லை
ஈழ மகளாகப் பிறந்தது உன் தவறா?...
நேர்ந்தது
என்ன கொடுமையோ?...
ஓய்ந்து
கிடந்தது என்ன கொடுமையோ?...
மூடிக்
கிடந்தது என்ன கொடுமையோ?...
கொடியவர்
உனக்கிழைத்த கொடுமைகளுக்கெலாம்
நீர்
சாட்சி நிலம் சாட்சி...
பரிதாபம்...
நீதி
தன்னும் கேட்கவில்லை...
நேர்மை
மனம் துடிக்கவில்லை...
சாட்சியம்
என்ன சொல்லும்...
வருத்தி
கொன்று தம் இச்சை
தீர்த்து
மகிழ்ந்தனர்...
கயவர்
தம் செயலுக்கு
காலம் தன்
பதில் கூறும்...
கசக்கி
எறியப்பட்ட
சிங்கள
அழகுராணி மனம்பேரிக்கு அன்றளித்தனர் தீர்ப்பு...
செம்மணியிலே
செங்குருதி சிந்த சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட கிருசாந்திக்கும் பின்பளித்தனர் தீர்ப்பு...
மட்டு
மகள் ரிபாயாவும்
வன்னி
மகள் பிரேமினியும் உன்னைப் போலவே புதைக்கப்பட்டனர்
மறை
கழன்ற ஈனர்களால்
கசக்கி
முகர்ந்து...
கதறக்
கதற கசக்கி முகர்ந்து எறியப்பட்டதால் தானோ உங்களுக்கு
இன்னும்
வழங்கப்படவில்லை தீர்ப்பு?...
ஒற்றுமையே
என்னவென்றறியா தமிழரின் பிரதிநிதிகள்
என்று கூறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிவருடிகள்
என்றபடியாலா?...
ரெலோ
அமைப்பு மட்டும்
ஏற்கவில்லை
தம்
தவறை இற்றை வரை...
காதிருந்தும்
செவிடர் போல
வாயிருந்தும்
ஊமையர் போல
இதைக்
கண்டும்
காணாமல் விட்டு மௌனிப்பது ஏனோ?
எமது
அரசியல் தலைமைகளே!
Post a Comment