கனடாவில் உள்ள பிராம்டன் நகரபிதா பற்றிக் பிரவுன் சந்தித்து உரையானார் சாணக்கியன்!

கடந்த கிழமை சாணக்கியன் கனடாவில் உள்ள பிராம்டன் நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களை சந்தித்து உரையானார். இவர் முன்னையநாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளை கனேடிய வாழ் தமிழர்களுக்கும் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் குரல் கொடுத்த ஒருவர். நமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சினைகள் பற்றியும் முழுவதுமாக தெரிந்த ஒருவர். அவருடனான இவ் சந்திப்பின் போது எமது மட்டக்களப்பு மாநகர சபையுடன் பிராம்டன் மாநகர சபையையும் இணைந்து ஆற்றக் கூடிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினேன் . எமது மாநகர சபைக்கான காலம் வரும் வருடம் மூன்றாம் மாதம் முடிவடையும் அதே வேளை இக் குறுகிய காலத்துக்குள் செய்யக்கூடிய திட்டங்கள் பற்றி இலங்கை வந்ததும் மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post