மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி செவ்வானத்தின் உயிரையும் பறித்து போட்டது!!
அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து
மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்!
பல இடப்பெயர்வுகளையும் சந்தித்து அதிக மருத்துவ உபகரணங்களையும்
இழந்து வன்னிப்
போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இயங்கிக்கொண்டிருந்த
மருத்துவமனை அது.
அங்கு
மண் போட்டால்... மண் விழாத அளவிற்கு
நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.
ஆனாலும்,
அதனைச் சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ துறையினரோ, வைத்தியர்களோ மற்றும் மருந்துகளோ இருக்கவில்லை!
பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி
குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது!
மருத்துவமனையின்
அமைதி காணாமல் போயிருந்தது.
மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தன.! அந்தச் சோகக் குரல்கள் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத்
தாக்கியது!
அதுவரை
நோயாளிகளை அனுமதிக்கும்
பகுதியில் தனியொருவராக நின்று வேலைகள் செய்து கொண்டிருந்த மருத்துவப்போராளி
தகவல் அனுப்புகின்றார்.
அதிக
மக்கள் காயமடைந்து கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்...!
சத்திர
சிகிச்சை அறைக்கு முன்னால் மாமரத்தடியில் தறப்பாளினால் (Tent) போடப்பட்டும், சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டுக் கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் கால்களை வைக்கின்றோம்; நானும் செவ்வானம் அக்காவும்..வேறு சிலரும் ..
குழந்தைகளின்
கெஞ்சுதல்கள் நெஞ்ச றைக் கூட்டை கீறிப்
பிளக்கின்றது!, "அக்கா இஞ்ச வந்து பாருங்கோ",
"தம்பியைப் பாருங்கோ" யாரைப் பார்ப்பது? யாரை தரம்பிரித்து முன்னுரிமை
கொடுப்பதென்றே அடையாளம் காணமுடியவில்லை....!
எங்கும்
ஓரே ஒலம்! மருத்துவ போராளிகள் வேகமானார்கள்...
இறந்தவர்களின்
உடலைக்கூட அகற்ற முடியாத சூழல். குண்டுகளும் சன்னங்களும் இடைவெளியற்று
தொடர்ந்து கொண்டிருந்தன
.யாரின்
உயிருக்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.
.தமிழீழ
காவால்துறையும் ,தமிழர் புணர் வாழ்வு கழகத்தினரும் அந்த கொடூரமான வேளையிலும்
காயமடைந்த மக்களை மருத்துவ மனைவரை கொண்டுவந்து சேர்ப்பித்துக் கொண்டேயிருந்தனர்......
அப்போது
சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெப்பம் எம்மை நெருங்கவேயில்லை;
பல நூறு மக்களின் கண்ணீராலும்,
செங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.
சிறிது
நேரத்தில் "படார்" என்ற சத்தத்துடன் விழுந்த
எறிகணையால் அந்த இடமே புகை
மண்டலமாகியது; கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை....!
இந்தச்
சத்ததுடன் எம்முடன் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த
மருத்துவப் போராளி செவ்வானம் அக்காவின் உயிர் அடங்கியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை.
செவ்வானம்.... அவள்
பெயரைப்போலவே மனமும் விசாலமானது எப்போதும் சிரித்த முகம்.. நெடிய உருவம். சுறுள் விழுந்த முடிகள். எப்போதும் சுறுசுறுப்பான செயற்பாடுகள். . நோயாளருடன் மட்டுமன்றி எல்லோருடனும் அன்பாக பழகும் ஒரு கருனை உள்ளம்
.
தமிழீழ
மருத்துவப் பிரிவின் மருத்துவ தாதியாக தன் கடமையை தொடங்கியவள்
..
2001 ஆண்டின்
பின்னர் மக்களுக்கான மருத்துவ பணிக்கு தெரிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு
செம்மலையில் இயங்கிய தியாக தீபம் தீலிபன் மருத்துவமனை
வைத்தியராக சென்றவள். .நீண்ட
காலம் அங்கு
நற் சேவை
செய்து
அக்கிராம
மக்களின் மனங்களில் ஆழமாய் பதிவாகின்றாள்.
இறுதியாக மாஞ்சோலை
மருத்துவமனை இயங்கிய பாடசாலையில் தூக்கம் துறந்து, உணவை மறந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள்
.ஆனால்
குருதி
நனைந்த கைகளுடன் ஓர் உயிரைக் காப்பாற்ற
போராடிக்கொண்டிருந்த அவள் உயிரையும் பறித்து
போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து
மருத்துவமனனமீது விழுந்த குண்டுகள்!
தொடையில்
காயமடைந்து கொண்டுவரப்பட்ட ஒருவரின் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தி கொண்டிருக்கையில், சரிந்துவிழுந்த செவ்வானம் அக்காவை காப்பற்ற முடியவில்லை. எத்தனையோ மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய அதே மருத்துவ மனை
மண் செவ்வானத்தின்
செங்குருதியால் சிவந்து போனது.
நினைத்துப்
பார்க்க முடியாத அளவிற்கு மனங்கள் சின்னாபின்னமாகியிருந்தன. வேதனை, கோபம் மற்றும் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீருடன் மீண்டும் எம் கடமையைத் தொடர்ந்த
நாட்களின் மறக்க முடியாத பல நினைவுகள்
இன்றும் எம்மைத் தூங்கவிடாமல் தூரத்திக்
கொண்டேயிருக்கின்றன.
மிதயா
கானவி
Post a Comment