நிரந்தர வைப்புச் சான்றிதழ் வழங்கலும் நூல் வெளியீடும் !

வன்னி விழிப்புலனற்றறோர் சங்கத்தின் 13 உறுப்பினர்களுக்கான

நிலையான  வைப்புச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும். இந்த அமைப்பின்  பழமரக்கன்றுகள் செயற்திட்டத்துக்கு நிதி உதவி வழங்கி வருகின்ற திரு. . தெய்வேந்திரன்  (குட்டி அண்ணன் - லண்டன்)அவர்களின் பழமரக்காடுகள் என்ற நூலின் வெளியீடும்  கடந்த 07 .02 .2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றன.சங்கத்தின் துணைத்தலைவர்

 திரு.கி. மகிந்தகுமார் நூல் வெளியீட்டு உரையினை நிகழ்த்த

  தலைவர்  அதனை வெளியிட்டு  வைத்தார். 

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்டச்

செயலர்  .S . முரளிதரன் முதல் பிரதியினைப்   பெற்றுக்கொண்டதுடன் சிறப்புரையும் ஆற்றினார்.

சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தாயக அன்னை திருமதி மங்கையற்கரசி கனகசபை  (லண்டன் ) முதலானோர்  வழங்கி வைத்தனர். சங்கத் தலைவர்

திருமதி யசோதா கிருஸ்ணகுமார்  அவர்களின் தலைமையில்  நடந்த

இந்நிகழ்வுகளைச் செயலர்  ஞானகுமார்  சிறப்பாக நெறிப்படுத்தினார்.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post