13 ஆவது திருத்த நகல் இன்று பிக்குமாரால் எரிக்கப்பட்டது!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நகலை இன்று பிக்குமார் எரித்ததை பார்த்தபோது , இந்த நாடு இனி எப்போதும் உருப்படும் சாத்தியமே இல்லை என்பது வழமை போலத் தெளிவாகத் தெரிந்துவிட்டது....

பிக்குமார் பாளி மொழியையும் சிங்களத்தையும் வைத்துக்கொண்டு , குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் விகாரைகளுக்குள் முடங்கியிருத்தலே நல்லது' என்று சி.வி .விக்கினேஸ்வரன் எம்.பி இன்று கூறியதில்  நியாயம் இருக்கிறது..

போனவாரம் வரை இந்தியாவின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி .எம்.எவ் கடனை பெற விண்ணப்பித்து , இன்று இந்தியாவுக்கு ஆப்படிக்கும் இலங்கையின் தைரியம் வேறு யாருக்கு வரும்?

ஸ்ரீ லங்கா பிக்குமார் பௌத்தத்தை தழுவும்வரை இந்த நாட்டுக்கு விமோசனமில்லை..

ரணில் மீது பாதுகாப்புத் தரப்பு அதிருப்தியாக இருக்கிறது என்ற சாரப்பட ஓமல்பே  சோபித தேரர் இன்று கூறியிருப்பது இலேசுப்பட்ட விடயமல்ல..

தனிச் சிங்கள சட்டத்தை கொண்டுவந்தவரையே போட்டுத்தள்ளியவர்கள் , தமிழருக்கு தீர்வைக்கொடுப்பேன் என்று சொன்னவரை எதுவும் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..?

தமிழருக்கு 13 வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும்.. ரணில் தனது பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்..

Siva Ramasamy (FACEBOOK)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post