இறுதிப் போரில் மாவீரரான மேலும் 20 பேருக்கு வீரவணக்க நிகழ்வு!



இறுதிப்போரில்
வீரச்சாவைத் தழுவியவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட இருபது மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 22.10.2023 அன்று அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக்கொடி ஏற்றலுடனும் பொது மாவீரர் திருவுருவப் படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தலுடனும் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து இறுதிப்போரில் வீரசவைத் தழுவிய இம் மாவீரர்களுக்கு அவர்களின் பெற்றோர் உறவினர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.தொடர்ந்து தலைமை உரை, மாவீரர்களுக்கான நினைவுரையுடன் மாவீர்களுக்கான நினைவுப்பாடலும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றது.





இந்நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின்  ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post